Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருநறையூர் ராமநாத சுவாமி திருக்கோவில், இந்தியாவிலே 2 மனைவிகளுடன் 2 மகனுடன் மங்கள சனீஸ்வரன்ராக தனி சன்னதிகளில் அருள் புரியும் சனீஸ்வர பகவான் திருக்கோவில் ஆகும்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் சனீஸ்வரர் இன்று அதிகாலை 5.22க்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை உலக நன்மைக்காக விசேஷ ஹோமமும், அதனை தொடர்ந்து மங்கல சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பலவகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த சனிப் பெயர்ச்சியை கும்பம், மகரம் , தனுசு , மிதுனம், கடகம் , துலாம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.